செய்திகள்
திருட்டு

திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-08-14 13:16 GMT   |   Update On 2021-08-14 13:16 GMT
திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

திருப்புவனத்தில் உள்ள சேதுபதி நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது58). இவர் திருப்புவனம் தாலுகாவில் உள்ள வல்லாரேந்தல் குரூப்பில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10-ந் தேதி இவரது மோட்டார் சைக்கிளை திருப்புவனம் யூனியன் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு கிராம நிர்வாக அலுவலருடன் சிவகங்கை கோர்ட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் பார்க்கும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருசக்கர வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News