செய்திகள்
கைது

முகநூலில் பழகி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-08-14 16:00 IST   |   Update On 2021-08-14 16:00:00 IST
15 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பிற்காக தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளர்.

அப்போது சிறுமிக்கும், சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் தற்போது, திருப்பூர் காட்டன் மில்லில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது தாயார் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், அவர் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக திருப்பூர் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகநூலில் பழகி ஆசை வார்த்தை கூறி கார்த்திகேயன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த சிறுமி தெரிவித்தார்.

இருவரையும் காரைக்குடி அழைத்து வந்த போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News