செய்திகள்
விபத்து பலி

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி

Published On 2021-08-10 17:00 IST   |   Update On 2021-08-10 17:00:00 IST
ஒரகடம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லம் சந்திப்பு அருகே செல்லும் போது, எதிரே வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார்த்திக்கும், மொபட்டில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிசோதிப் மெஹந்தி (38), ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News