செய்திகள்
காரைக்குடி அருகே விபத்தில் முதியவர் பலி
காரைக்குடி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி பாவேந்தர் சாலையைச் சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 68). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் குன்றக்குடி சென்றுகொண்டிருந்தார்.எதிரே குன்றகுடி மேற்கு ரத வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோவிலூர் சாலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று மோதியது.இதில் வீரகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.