செய்திகள்
மரணம்

சீர்காழி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி

Published On 2021-07-30 16:47 IST   |   Update On 2021-07-30 16:47:00 IST
சீர்காழி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உயிரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜய் மனைவி விஜயா (30). இவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விஜயா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்துகின்றனர்.

Similar News