செய்திகள்
சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் நகர் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்றத்திற்கு உட்பட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கையில் நகர் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மதுரை தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்தியன், நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராஜ்சத்தியன் பேசுகையில், தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க. மீது செயல் படக்கூடாது என்றார்.
முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபி, மண்டல செயலாளர் தமிழ்செல்வன், பாசறை பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்றத்திற்கு உட்பட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கையில் நகர் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மதுரை தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்தியன், நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராஜ்சத்தியன் பேசுகையில், தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க. மீது செயல் படக்கூடாது என்றார்.
முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபி, மண்டல செயலாளர் தமிழ்செல்வன், பாசறை பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.