செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்க வைத்திருந்ததாக சாகுல் ஹமீது(வயது 68), லியாத் அலி(50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.