செய்திகள்
குடியாத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் அருகே காக்காதோப்பு மற்றும் உள்ளி கிராமம் அருகே திடீர் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 47), காக்காதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் அருகே காக்காதோப்பு மற்றும் உள்ளி கிராமம் அருகே திடீர் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 47), காக்காதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.