செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 187 பேருக்கு கொரோனா

Published On 2021-07-14 10:42 GMT   |   Update On 2021-07-14 10:42 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 174 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 286 பேருக்கு பரிசோதனை செய்ததில் 193 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 187 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 305 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 174 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 22 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.

தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 615 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News