செய்திகள்
கைது

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

Published On 2021-07-14 15:41 IST   |   Update On 2021-07-14 15:41:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ஐயப்பன் (20). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐயப்பன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூதனூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News