செய்திகள்
திருட்டு

ஆலங்குடியில் தனியார் பள்ளியில் ரூ.1¾ லட்சம் திருட்டு

Published On 2021-07-13 15:44 IST   |   Update On 2021-07-13 15:44:00 IST
ஆலங்குடியில் தனியார் பள்ளியில் ரூ.1¾ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடியில் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் இந்த பள்ளியை அதன் காவலாளி சுற்றிபார்த்துள்ளார். அப்போது, பள்ளியின் அலுவலக அறை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளி தாளாளர் இளந்தென்றலுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது, மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவின் பதிவு எந்திரமும் திருடப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் இருந்து விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

Similar News