செய்திகள்
புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி:
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் படையெடுக்க தொடங்கினர்.
வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அதிகம் வருகை தருவார்கள். நேற்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அங்கு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால் மதிய நேரத்திலும் கடற்கரை சாலையில் மக்களை காண முடிந்தது.
இதேபோல் கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
இதேபோல் சண்டே மார்க்கெட்டில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் படையெடுக்க தொடங்கினர்.
வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அதிகம் வருகை தருவார்கள். நேற்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அங்கு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால் மதிய நேரத்திலும் கடற்கரை சாலையில் மக்களை காண முடிந்தது.
இதேபோல் கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
இதேபோல் சண்டே மார்க்கெட்டில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.