செய்திகள்
புதுச்சேரியில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,976 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,08,37,222 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 895 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,040 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 41,526 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 1,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.