செய்திகள்
மணல்மேடு அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
மணல்மேடு அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த முட்டம் பாலம் அருகில் மணல்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 110 புதுச்சேரி சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாப்பாக்குடியை சேர்ந்த செல்லதுரை மகன் செல்வகுமார் (வயது 34) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.