செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-07-10 15:32 IST   |   Update On 2021-07-10 15:32:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 38 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' எண்ணிக்கை 26 ஆயிரத்து635 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 341 ஆக உள்ளது.

Similar News