செய்திகள்
திருட்டு

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-07-07 11:58 GMT   |   Update On 2021-07-07 11:58 GMT
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள கீழப்பட்டி ராசியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 50). சம்பவத்தன்று இவர் அய்யனார்புரம் அருகே உள்ள பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்ப வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News