செய்திகள்
தற்கொலை

கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-07-06 11:07 GMT   |   Update On 2021-07-06 11:07 GMT
கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:

கீரனூரை அடுத்த தச்சக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48). இவர் சில வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, சொந்த ஊர் வந்த இவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குடும்பத்தினருக்கு போன் செய்து விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News