செய்திகள்
கைது

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

Published On 2021-07-06 03:43 GMT   |   Update On 2021-07-06 03:43 GMT
ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அரசு மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சிகிச்சைக்காக கடந்த 3-ந்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா தேவி மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் மாமா முறையான கோபியை சேர்ந்த கார்த்தி (23), சிறுமியின் சகோதரர்கள் முறையான 17வயது சிறுவர்கள் 2 பேர் சிறுமியை மிரட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்தி மற்றும் 2 சிறுவர்கள் என 3 பேர் மீதும் போக்சோ சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தியை ஈரோடு சிறையிலும், சிறுவர்கள் இருவரையும் கோவையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

Tags:    

Similar News