செய்திகள்
மரணம்

போளூரில் பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-07-05 09:32 GMT   |   Update On 2021-07-05 09:32 GMT
போளூரில் பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), பெயிண்டர். இவர் போளூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவர் வீட்டில் கடந்த 2-ந் தேதி பெயிண்டு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது 7 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவருக்கு போளூரில் முதலுதவி அளித்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News