செய்திகள்
மரணம்

வில்லியனூரில் வேளாண்துறை ஊழியர் மயங்கி விழுந்து மரணம்

Published On 2021-07-03 15:48 GMT   |   Update On 2021-07-03 15:49 GMT
வில்லியனூரில் வேளாண்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:

வில்லியனூர் சிவகணபதிநகரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது52). இவர் வேளாண்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மகன்கள் திவாகர் மற்றும் சுதாகர் ஆகியோர் நாராயணசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Tags:    

Similar News