திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமைகலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பேசும் போது கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 317 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாமில் தினமும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தடுப்பூசிசெலுத்தி கொள்கின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 30-ம் தேதி வரை நடந்த முகாம்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டநபர்களில் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 717 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1,602 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அதேபோல் 44 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 893 பேர் முதல் தவணைதடுப்பூசியும், 37 ஆயிரத்து 477 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், ஆர்.டி.ஓ. வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.