செய்திகள்
கைது

தூசி அருகே மணல் கடத்திய 7 பேர் கைது

Published On 2021-07-02 17:30 IST   |   Update On 2021-07-02 17:30:00 IST
தூசி அருகே மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:

வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் தலைமை காவலர்  மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தி வந்தனர்.

அவர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர். கைதானவர்கள் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் (வயது 57), முத்து (60), குமார் (60), பையாகுட்டி (45), செல்வம் (41), மணிகண்டன் (38), வெங்கடேசன் (57) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வீரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News