செய்திகள்
தற்கொலை

கண்ணமங்கலத்தில் கணவன்- மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை

Published On 2021-07-01 14:40 IST   |   Update On 2021-07-01 14:40:00 IST
கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரே சேலையில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). பொக்லைன் ஓட்டி வந்தார். இவரது மனைவி இந்துமதி (34). இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கண்ணன்-இந்துமதி ஆகிய இருவரும் தங்கள் வீட்டிலேயே ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினர்.

உறவினர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது பிணத்தையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா? இல்லை இச்சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உமாதேவி (9) என்கிற மகளும், விக்னேஷ் (7) என்கிற மகனும் உள்ளனர். பொற்றோரை இழந்து அவர்கள் தவித்து வருகின்றனர்.

Similar News