செய்திகள்
கைது

காரைக்கால் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-06-28 22:40 IST   |   Update On 2021-06-28 22:40:00 IST
காரைக்கால் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் நகர் பகுதியான ரோஜா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்த முகமது கைப் (வயது 21) என்பவரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News