செய்திகள்
விபத்து பலி

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

Published On 2021-06-28 20:03 IST   |   Update On 2021-06-28 20:03:00 IST
திருப்பத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் ஆதினமிளகி. இவருடைய மகன் அருண் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு செம்பனூரில் இருந்து நடுவிக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மானகிரி அருகே பட்டினம்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த ஆரோக்கியசாமி என்பவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அருண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்த ஆரோக்கியசாமி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News