செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

வேதாரண்யம் தாலுகாவில் நாளை மின்தடை

Published On 2021-06-27 11:24 GMT   |   Update On 2021-06-27 11:24 GMT
வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது.
வேதாரண்யம்:

நாகை செயற்பொறியாளர் நக்கீரன், வேதாரண்யம் உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேத்தாகுடி வடக்கு, செம்போடை புஷ்பவனம், ஆகிய பகுதிகளுக்கும். வேட்டைக்காரனியிருப்பு துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாலுவேதபதி பகுதியிலும், ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்திற்குபட்ட கருப்பம்புலம், கடினல்வயல், செருதலைகாடு ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News