செய்திகள்
கைது

நாகூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

Published On 2021-06-27 16:41 IST   |   Update On 2021-06-27 16:41:00 IST
நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர்.
நாகூர்:

நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை வெளிப்பாளையம் தாமரைகுளத்தை சேர்ந்த ஜெயசந்திரனின் மனைவி மாரீஸ்வரி (வயது 27) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News