செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2021-06-27 16:20 IST   |   Update On 2021-06-27 16:20:00 IST
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர், சிக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர், மில்லடி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் விஜய் (வயது 24), பெருங்கடம்பனூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற மில்லடி தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாண்டித்துரை (22), சிக்கல் கோட்டேரி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சசிகுமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News