செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-06-25 09:24 GMT   |   Update On 2021-06-25 09:24 GMT
மதுபாட்டில்கள் கடத்திய வந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் தனிப்படை போலீசார் திருமுருகன், கதீஷ்குமார், வெற்றி செல்வன் ஆகியோர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கே புதுரோடு பகுதியில் வேதாரண்யம் நாகை நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகை பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் இரண்டு பேர் வேகமாக வந்ததையடுத்து அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 375 மில்லி லிட்டர் அளவு கொண்ட 30 வெளிமாநில மதுபாட்டில்களும் மற்றும் 750 மில்லி லிட்டர் கொண்ட மூன்று பாடல்களும் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் நெய்விளக்கு சேர்ந்த சத்தியசீலன் (வயது 22) வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (25) என்பது தெரியவந்தது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Tags:    

Similar News