செய்திகள்
விஷம்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-06-25 09:17 GMT   |   Update On 2021-06-25 09:17 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55) ஆசாரி. கடந்த 4 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும் அவதிபட்ட மாரிமுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News