செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு
மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 284 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,357 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. இதில், 19 ஆயிரத்து 535 பேர் தடுப்பூசியை போட்டு கொண்டனர்.