செய்திகள்
திருட்டு

போச்சம்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2021-06-21 04:24 GMT   |   Update On 2021-06-21 04:24 GMT
போச்சம்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி ராசி நகரை சேர்ந்தவர் மயில்வாகனன் (வயது 48). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து மயில்வாகனன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News