செய்திகள்
பேரிகை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
பேரிகை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வனச்சரகம் காருபலா பீட் வனக்காவலர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பேரிகை அருகே கடத்தூர்-சின்னகுத்தி சாலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நாட்டுத்துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சேர்ந்த சிவராஜ் (வயது 26) என்பதும், அவர் உரிய ஆவணம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபர் பேரிகை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.