செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் ஜெயிலில் உள்ள 107 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-02 07:14 IST   |   Update On 2021-06-02 07:14:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொரப்பாடி ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி மற்றும் அவரது கணவர் முருகனுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News