செய்திகள்
புதிய உச்சமாக ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
கொரோனா தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி இருக்கும் என்று மருத்துவக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய பாதிப்பு நிலவரத்தை பார்க்கும் போது வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதை கட்டுப்படுத்தவும், பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களே. மாவட்டத்தின் கிராம பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள் இரும்பு தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் உள்ள பொதுமக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை கடந்துள்ளதால் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 145 பேரும், கிராம பகுதியில் 79 பேரும், பேரூராட்சி பகுதியில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கே.வி.குப்பம் தாலுகாவில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குடியாத்தம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான முடிவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
கொரோனா தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி இருக்கும் என்று மருத்துவக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய பாதிப்பு நிலவரத்தை பார்க்கும் போது வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதை கட்டுப்படுத்தவும், பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களே. மாவட்டத்தின் கிராம பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள் இரும்பு தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் உள்ள பொதுமக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை கடந்துள்ளதால் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 145 பேரும், கிராம பகுதியில் 79 பேரும், பேரூராட்சி பகுதியில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கே.வி.குப்பம் தாலுகாவில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குடியாத்தம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான முடிவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.