செய்திகள்
தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வழியாக நடந்து வரும் பொதுமக்கள்

காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வரும் பொதுமக்கள்

Published On 2021-05-20 14:54 IST   |   Update On 2021-05-20 14:54:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயபடுத்தபட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயபடுத்தபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து இபாஸ் அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் ஆந்திராவில் தமிழக எல்லை வரை வாகனங்களில் வரும் பொதுமக்கள் வேலூருக்கு நடந்து வர தொடங்கியுள்ளனர்.

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து தமிழகத்திற்குள் வருகின்றனர். இதே போல தமிழகத்தில் இருந்தும் கிறிஸ்டியான்பேட்டை வழியாக ஆந்திரப் பகுதிக்கு நடந்து செல்கின்றனர்.

ஆந்திராவில் இருந்து நடந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கின்றனர். எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் அவர்களின் முகவரி பதிவு செய்யப்படுகிறது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

அவர்களுடைய முழு விபரமும் சேகரிக்கப்படுகின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

Similar News