செய்திகள்
கறம்பக்குடி பகுதியில் தடையை மீறி கடை திறந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
கறம்பக்குடி பகுதியில் தடையை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கடையை திறந்து வியாபாரம் செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் கறம்பக்குடி பகுதியில் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடையை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கடையை திறந்து வியாபாரம் செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.