செய்திகள்
முடிதிருத்தும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
முடிதிருத்தும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பி அறந்தாங்கியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், அஸ்வதி என்ற மகளும், அபிலேஷ் என்ற மகளும் உள்ளனர். முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.