செய்திகள்
தற்கொலை

கீரனூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-05-16 13:23 GMT   |   Update On 2021-05-16 13:23 GMT
கீரனூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:

கீரனூரை அடுத்த மேலதேமுத்துபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 66). இவர் 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News