செய்திகள்
சீர்காழியில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
சீர்காழியில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பிடாரி கீழ வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). சாராய வியாபாரியான இவர் மீது மதுவிலக்கு தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, சங்கரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சீர்காழி மதுவிலக்கு போலீசார் குண்டர் சட்டத்தில் சங்கரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.