செய்திகள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களை டாக்டர் காயத்ரி பரிசோதித்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதி பூராசாமி, செயலாளர் திருநாவுகரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.