செய்திகள்
கைது

ஆண்டிமடம் பகுதியில் 2¾ கிலோ கஞ்சா பறிமுதல்- 7 பேர் கைது

Published On 2021-05-14 10:31 GMT   |   Update On 2021-05-14 10:31 GMT
ஆண்டிமடம் பகுதியில் 2¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு விளந்தை பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அந்தப் பகுதிக்கு போலீசாருடன் சென்றார். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்ற 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் சுமார் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆண்டிமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த சதீஷ்ராஜ் (வயது 24), அழகாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த சிந்தனை ராஜா (18) என்பது தெரியவந்தது.

இதேபோல் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திற்கு சென்று, 3 பேரை பிடித்து சோதனை செய்ததில் 7 பொட்டலங்கள் கஞ்சா இருந்தது. இதில் சுமார் 1,400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (24), கடலூர் மாவட்டம் பாசிகுளம் புதுக்காலனி தெருவைச் சேர்ந்த கருப்புசாமி (38), அழகாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த பகத்சிங் (19) என்பது தெரியவந்தது.

இதேபோல் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் 2 பேரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் சுமார் 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்ததும், அவர்கள் ஆண்டிமடம் சிவலிங்கபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (30), சூரக்குழி காலனி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, 7 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News