செய்திகள்
நாட்டு மருந்து கடை

நாகையில் நாட்டு மருந்து கடைகள் திறந்து இருந்தன

Published On 2021-05-13 10:25 GMT   |   Update On 2021-05-13 10:25 GMT
நாட்டு மருந்து கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் கடை உரிமையாளர்கள், நாட்டு மருந்து பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து நேற்று முதல் நாட்டு மருந்து கடைகள், பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாகை பெரிய கடை வீதியில் 10-க்கும் மேற்பட்ட நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பழக்கடைகளும் திறக்கப்பட்டன.

இந்த கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி சென்றனர். நாட்டு மருந்து கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் கடை உரிமையாளர்கள், நாட்டு மருந்து பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்ததால் பழ வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News