செய்திகள்
மரணம்

நாகை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-05-12 12:45 GMT   |   Update On 2021-05-12 12:45 GMT
நாகை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

நாகை அருகே சிக்கல் ஊராட்சி, கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம் பழம் உலுக்கி கொண்டிருந்தார். அவரது மனைவி செல்லம்மாள் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தார்.

அப்போது பக்கிரிசாமி தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பக்கிரிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News