செய்திகள்
அபராதம்

ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு அபராதம்

Published On 2021-05-11 13:55 GMT   |   Update On 2021-05-11 13:55 GMT
ஊரடங்கு மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.
பொறையாறு:

செம்பனார்கோவில் கடைவீதியில் மதியம் 12 மணிக்கு கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்போது செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு மீறி மோட்டார்சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அரசு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்து அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பினர்.
Tags:    

Similar News