செய்திகள்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குழவடையான் கிராமத்தின் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா, சம்பவ இடத்தை பார்வையிட்டபோது, மூதாட்டி உடல் அருகே ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் கிடந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குழவடையான் கிராமத்தின் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா, சம்பவ இடத்தை பார்வையிட்டபோது, மூதாட்டி உடல் அருகே ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் கிடந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.