செய்திகள்
சீர்காழி, கொள்ளிடத்தில் வங்கி ஊழியர்கள் 3 பேர், 2 போலீசாருக்கு கொரோனா
சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.