செய்திகள்
தற்கொலை

அரியலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2021-04-27 20:07 IST   |   Update On 2021-04-27 20:07:00 IST
குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. 
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைவாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News