செய்திகள்
கோப்பு படம்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை பார்கள் மூடல்

Published On 2021-04-27 12:23 GMT   |   Update On 2021-04-27 12:23 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளைவும் விதித்தது. அதன்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை பார்களும் மூடப்பட்டன.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்ர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் 2-வது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில இயங்கிவரும் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஒட்டல்களில் உள்ள தனியார் மதுபானக் கூடங்கள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருந்தன.
Tags:    

Similar News