செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டங்களில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-26 23:40 IST   |   Update On 2021-04-26 23:40:00 IST
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,357 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,019 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 287 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,484 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,371 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 90 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 180 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 57 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Similar News